/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வீட்டிலிருந்து சென்ற பெண் மாயம்
/
வீட்டிலிருந்து சென்ற பெண் மாயம்
ADDED : டிச 09, 2024 07:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: ஓசூர், அரசனட்டி கீழ் தெருவை சேர்ந்தவர் சாக்கப்பன் மனைவி கலைவாணி, 30. மனநலம் பாதிக்கப்பட்ட இவர், பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
கடந்த, 1 மாலை, 6:00 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்ற கலைவாணி, மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது கணவர் சாக்கப்பன் புகார் படி, சிப்காட் போலீசார் தேடி வருகின்றனர்.