sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

429 பொருட்களை அடையாளம் காட்டிய குழந்தைக்கு இந்தியா புக் ஆப் ரெக்கார்ட் நிறுவனம் சான்று வழங்கல்

/

429 பொருட்களை அடையாளம் காட்டிய குழந்தைக்கு இந்தியா புக் ஆப் ரெக்கார்ட் நிறுவனம் சான்று வழங்கல்

429 பொருட்களை அடையாளம் காட்டிய குழந்தைக்கு இந்தியா புக் ஆப் ரெக்கார்ட் நிறுவனம் சான்று வழங்கல்

429 பொருட்களை அடையாளம் காட்டிய குழந்தைக்கு இந்தியா புக் ஆப் ரெக்கார்ட் நிறுவனம் சான்று வழங்கல்


ADDED : ஜன 04, 2025 07:15 AM

Google News

ADDED : ஜன 04, 2025 07:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: குறைந்த வயதில், 429 பொருட்களை அடையாளம் காட்டியதற்-காக, ஒரு வயது, 7 மாத குழந்தைக்கு, 'இந்தியா புக்ஆப் ரெக்கார்ட்' சான்றிதழ் பதக்கம் வழங்கி கவுரவித்துள்ளது.

கிருஷ்ணகிரி பழையபேட்டையை சேர்ந்தவர் போலீஸ்காரர் தேவராஜ், 30. இவரது மனைவி பிரியங்கா, 30. இவர்களது மகள் தமிழ் யாழினி; ஒரு வயது, 7 மாத பெண் குழந்தை. இக்

குழந்தைக்கு அவரது தாய், 6 மாத குழந்தையாக இருந்த போதே, பார்க்கும் பொருட்களை சுட்டிக்காட்டி பெயரை உச்ச-ரித்து வந்துள்ளார்.

கடந்த, 4 மாதங்களாக, பறவை, விலங்கு, காய்கறி உள்ளிட்ட பொருட்களின் பெயர்களை தீவிரமாக கற்றுக் கொடுத்து வந்தார். தற்போது இக்குழந்தை, பறவைகள், விலங்-குகள், காய் கறி, பழங்கள், தேசிய சின்னங்கள் என மொத்தம், 417 பொருட்கள் மற்றும், 12 உடல் பாகங்களை அடையாளம் காட்டியுள்ளது. இவற்றை வீடியோ எடுத்து ஹரியானா மாநிலத்தில் இயங்கி வரும் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட் நிறுவனத்திற்கு அனுப்பியுள்-ளனர். குறைந்த வயதில், 429 பொருட்களை அடையாளம் காட்டி-யதற்காக, குழந்தை தமிழ் யாழினிக்கு, இந்தியா புக்ஆப் ரெக்கார்ட் சான்றிதழ், பென், ஐடி கார்டு மற்றும் பதக்கம் வழங்கி கவுரவித்துள்ளது.

இது குறித்து பிரியங்கா கூறுகையில், ''இன்டர்நேஷனல் புக் ஆப் ரெக்கார்டில் இதற்கு முன்பு, ஒரு வயது, 9 மாத குழந்தை, 10.5 நிமிடத்தில், 100 பொருட்களை அடையாளம் காட்டியது சாதனையாக உள்ளது. ஆனால், தமிழ் யாழினி, 7.58 நிமிடத்தில், 113 பொருட்களை அடையாளம் காட்டுகிறார். இந்த சாதனை வீடியோவை இன்டர்நேஷனல் புக் ஆப் ரெக்கார்டுக்கு அனுப்பி-யுள்ளோம். அடுத்ததாக, கின்னஸ் சாதனைக்காக குழந்தைக்கு பயிற்சி அளிக்க உள்ளோம்,'' என்றார்.






      Dinamalar
      Follow us