ADDED : ஜூலை 05, 2025 01:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேன்கனிக்கோட்டை, கர்நாடகா மாநிலம், பெங்களூருவை சேர்ந்தவர் ஆனந்த், 35. சற்று மனநலம் பாதிக்கப்பட்டிருந்த இவர் கடந்த, 30ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே கோபால்நாயன்தொட்டி கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்.
அங்கிருந்து கடந்த, 1ம் தேதி காலை, 7:30 மணிக்கு வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை. அவரது தாய் பில்லம்மா புகார்படி, தேன்கனிக்கோட்டை போலீசார் தேடி வருகின்றனர்.