/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தடுப்பணைகளில் குவிந்து கிடக்கும் மணல் தண்ணீர் தேங்காமல் வெளியேறும் அவலம்
/
தடுப்பணைகளில் குவிந்து கிடக்கும் மணல் தண்ணீர் தேங்காமல் வெளியேறும் அவலம்
தடுப்பணைகளில் குவிந்து கிடக்கும் மணல் தண்ணீர் தேங்காமல் வெளியேறும் அவலம்
தடுப்பணைகளில் குவிந்து கிடக்கும் மணல் தண்ணீர் தேங்காமல் வெளியேறும் அவலம்
ADDED : அக் 09, 2024 12:46 AM
போச்சம்பள்ளி, அக். 9-
கிருஷ்ணகிரி மாவட்டம், கே.ஆர்.பி., அணையிலிருந்து வெளியேறும் உபரிநீர் மற்றும் மாவட்டத்தில் பரவலாக பெய்யும் மழையால் வரும் தண்ணீர், தென்பெண்ணை ஆற்றின் வழித்தடத்தில் உள்ள காவேரிப்பட்டணம், நெடுங்கல் தடுப்பணை, அகரம் மருதேரி தடுப்பணை, அரசம்பட்டி தடுப்பணை, பெண்டரஹள்ளி தடுப்பணை உள்ளிட்டவைகளை கடந்து, ஊத்தங்கரை பாம்பாறு அணையை அடைந்து, அணை நிரம்பிய பின் அங்கிருந்து திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனுார் அணைக்கு தண்ணீர் செல்கிறது. அங்கிருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் விழுப்புரம், கடலுார் மாவட்டம் வழியாக கடலுக்கு செல்கிறது.
நெடுங்கல் அணை கட்டப்பட்டு, 130 ஆண்டு கடந்த நிலையில், அந்த தடுப்பணையில், 5 அடி உயரத்திற்கு மணல் ஆக்கிரமித்துள்ளது. அகரம் மருதேரி தடுப்பணை கட்டப்பட்டு, 3 ஆண்டுகள் ஆன நிலையில், அதில், 5 அடி உயரத்திற்கு மணல் தேங்கி உள்ளது. அதற்கு அடுத்த அரசம்பட்டியிலுள்ள தடுப்பணை கட்டி, 3 ஆண்டுகள் ஆன நிலையில், தடுப்பணை உயரமுள்ள, 5 அடி அளவிற்கும் மணல் தேங்கி உள்ளது. அதற்கடுத்த பெண்டரஹள்ளியில், 3 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட தடுப்பணையிலும் மணல் தேங்கியுள்ளது.
தென்பெண்ணை ஆற்று படுகையை ஓட்டிய கிராமங்களில் நிலத்தடி நீரை மேம்படுத்தவும், விவசாயிகளின் நலன் கருதியும் அமைக்கப்பட்ட தடுப்பணைகளில், அதிகளவு மணல் குவிந்து கிடப்பதால், கே.ஆர்.பி., அணையிலிருந்து திறக்கப்படும் உபரி நீர், தென்பெண்ணை ஆற்று பகுதியில் மழைக்காலங்களில் ஆற்றுக்கு வரும் மழைநீர் தடுப்பணைகளில் குவிந்துள்ள மணலால், தடுப்பணையில் தேங்காமல், அப்படியே வெளியேறி விடுகிறது.
விவசாயிகளின் நலன், நிலத்தடி நீர்மட்டம் உயரும் நோக்கில், அரசு அமைத்த தடுப்பணைகளின் சீறிய நோக்கம் வீணாகி வருகிறது. அதேபோல், நிலத்தடி நீர் மட்டம் உயராமல் உள்ளதால், தென்பெண்ணை ஆற்று படுகையிலுள்ள விவசாயிகள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர். பொதுமக்கள், விவசாயிகளின் நலன் கருதி தடுப்பணைகளில் தேங்கிய மணலை பொதுப்பணித்துறையினர் அகற்றி நடவடிக்கை எடுக்க, விவசாயிகள், மக்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.