ADDED : அக் 24, 2024 03:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அடுத்த முகலுாரை சேர்ந்தவர் நஞ்சப்பா, 36. கட்டட மேஸ்திரி; இவரது மகன் அபினேஷ், 13, அப்பகுதியிலுள்ள அரசு நடுநிலைப் பள்ளியில், 8ம் வகுப்பு படித்து வந்தார்; கடந்த, 19 மாலை, 4:30 மணிக்கு, பால் காய்ச்ச காஸ் அடுப்பை ஆன் செய்தவர், அடுப்பு பர்னரை பற்ற வைக்கவில்லை.
இதனால் காஸ் கசிந்துள்ளது. அதன்பின், 5 நிமிடத்திற்கு பிறகு பர்னரை பற்ற வைத்த போது, அறையில் பரவியிருந்த சமையல் காஸ் தீப்பிடித்து, மாணவன் உடலில் தீப்பற்றியது. உடல் கருகி ஆபத்தான நிலையில், தர்மபுரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவன் அபினேஷ் கடந்த, 21 இரவு உயிரிழந்தார். கெலமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.