ADDED : டிச 05, 2024 07:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: கடலுார் மாவட்டம், நெய்வேலி அருகே வடகுத்துார் காந்தி நகர் மல்லிகை தெருவை சேர்ந்தவர் பார்த்தசாரதி, 58.
டிப்ளமோ பட்ட-தாரியான இவரது மகன் தருண், 26, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் எழில் நகரில் கடந்த, 5
மாதமாக தங்கி, வேலை தேடி வந்தார். ஆனால், சரியான வேலை கிடைக்கவில்லை. இதனால் விரக்தியடைந்த
தருண் கடந்த, 29 மாலை, 6:30 மணிக்கு, தன் அறையிலிருந்து வெளியே சென்றவர் மாயமானார். அவரது தந்தை
பார்த்தசாரதி புகார் படி, ஓசூர் டவுன் போலீசார் தருணை தேடி வருகின்றனர்.