/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கால பைரவர் கோவில்களில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு
/
கால பைரவர் கோவில்களில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு
ADDED : டிச 24, 2024 01:42 AM
கிருஷ்ணகிரி, டிச. 24-
கிருஷ்ணகிரி அருகே, கல்லுக்குறிக்கி பெரியஏரி மேற்கு கோடியிலுள்ள காலபைரவர் கோவிலில் நேற்று தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. காலை, 7:00 மணிக்கு, கணபதி ஹோமம் உள்ளிட்ட ஹோமங்களும், காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகமும் நடந்தது. தங்கக்கவச அலங்காரத்தில் கால பைரவர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பகல், 12:00 மணிக்கு, கால பைரவர் உற்சவம், பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பெண்கள் பூசணி, தேங்காய் மற்றும் எலுமிச்சையில் விளக்கேற்றி வழிபட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை, 165 கிராமங்களை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.
இதே போல், கிருஷ்ணகிரி அடுத்த சூரன் குட்டையிலுள்ள தட்சிய காலபைரவர் கோவிலில், தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு
நடந்தது.