/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஸ்கூட்டர் மீது கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில் மூவர் பலி
/
ஸ்கூட்டர் மீது கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில் மூவர் பலி
ஸ்கூட்டர் மீது கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில் மூவர் பலி
ஸ்கூட்டர் மீது கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில் மூவர் பலி
ADDED : அக் 12, 2024 07:37 AM
கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் அருகே, ஸ்கூட்டர் மீது கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில் மூன்று பேர் பலியாகினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் போத்தாபுரம் அருகே, கிருஷ்ணகிரியில் இருந்து சென்னை நோக்கி, பல்வேறு பொருட்களை ஏற்றிச் சென்ற கன்டெய்னர் லாரி, தர்மபுரி-கிருஷ்-ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை, 3:00 மணிய-ளவில், ஒன்வேயில் சென்றுள்ளது. அப்போது அந்த வழியாக, ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரில் மூன்று பேர் வந்துள்ளனர்.
கண்ணிமைக்கும் நேரத்தில், கன்டெய்னர் லாரி, ஸ்கூட்டர் மீது பயங்கரமாக மோதி அவர்கள் மீது ஏறி சென்றது.இதில், ஸ்கூட்டரில் சென்ற மூவரும் உடல் நசுங்கி பலியாகினர். காவேரிப்பட்டணம் போலீசார் சடலங்களை மீட்டனர்.விசாரணையில், ஸ்கூட்டரில் வந்தவர்கள் தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே மாம்பட்டியை சேர்ந்த ராகுல், 20, நச்சினம்பட்டி
வசந்தகுமார், 28, கணம்பட்டி விஜயகுமார், 25, என்பது தெரிய வந்துள்ளது.இவர்கள் எதற்காக கிருஷ்ணகிரி நோக்கி வந்தனர் என்பது தெரிய-வில்லை. கன்டெய்னர் லாரியை ஓட்டி வந்த, மார்த்தாண்டம்
பகு-தியை சேர்ந்த அலெக்சாண்டர், 38, என்பவரை காவேரிப்பட்-டணம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.