/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கற்கள் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்
/
கற்கள் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்
ADDED : ஏப் 19, 2025 01:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்:
விழுப்புரம் மண்டல சுரங்கம் மற்றும் புவியியல் துறை சிறப்பு தனிப்படையினர், உதவி இயக்குனர் முத்து தலைமையில், ஓசூர் - தேன்கனிக்கோட்டை சாலையில், மத்திகிரி கால்நடை பண்ணை அருகே நேற்று முன்தினம் வாகன சோதனை செய்தனர்.
அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்த போது, உரிய அனுமதி சீட்டு இல்லாமல், 2 யூனிட் கற்களை எடுத்து செல்வது தெரிந்தது. இதனால் லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள், மத்திகிரி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிந்து, டிரைவர் மற்றும் உரிமையாளரை தேடி
வருகின்றனர்.