ADDED : செப் 23, 2024 03:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் கடந்த ஒரு மாதமாக கோடைக்காலத்தை போல் வெயில் வாட்டி வருகிறது.
இதனால், பகலில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வெளியில் செல்ல முடியாமல் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இரவிலும் அனல் காற்று வீசி வந்த நிலையில், நேற்று மாலை, 5:00 மணி முதல் கிருஷ்ணகிரியில் மழை பெய்தது. தொடர்ந்து, 2 மணி நேரம் சாரல் மழை பெய்ததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மழையால் குளிர்ந்த காற்று வீசியதால், பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.