sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

தாட்கோ மூலம் சர்வதேச விமான நிலையத்தில் பணிபுரிய பயிற்சி

/

தாட்கோ மூலம் சர்வதேச விமான நிலையத்தில் பணிபுரிய பயிற்சி

தாட்கோ மூலம் சர்வதேச விமான நிலையத்தில் பணிபுரிய பயிற்சி

தாட்கோ மூலம் சர்வதேச விமான நிலையத்தில் பணிபுரிய பயிற்சி


ADDED : ஜன 03, 2025 01:22 AM

Google News

ADDED : ஜன 03, 2025 01:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி, ஜன. 3-

தாட்கோ மூலம் சர்வதேச விமான நிலையத்தில் பணிபுரிய பயிற்சி வழங்கப்பட உள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் (தாட்கோ) மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்தவர்களுக்கு விமான நிலைய பயணிகள் சேவை அடிப்படை படிப்பு, சரக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி அடிப்படை படிப்பு, சுற்றுலா துறையின் அடிப்படை படிப்பு மற்றும் விமான பயண முன்பதிவு போன்ற பயிற்சி வழங்கப்படவுள்ளது.

இப்பயிற்சி பெற பிளஸ் 2 அல்லது பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்ற, 18 வயது முதல் 23 வயது நிரம்பிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சார்ந்தவர்களாக இருக்க வேண்டும். இப்பயிற்சிக்கான காலஅளவு, 6 மாதம். விடுதியில் தங்கி படிக்க வசதியும், பயிற்சிக்காக செலவு தொகையான, 95 ஆயிரம் ரூபாய் தாட்கோவால் வசூலிக்கப்படும். இப்பயிற்சியை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில், ஐ.ஏ.டி.ஏ., கனடா மூலம் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும்.

மேலும், தனியார் விமான நிறுவனங்களிலும், சரக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நிறுவனங்களிலும், நட்சத்திர விடுதிகளிலும், சொகுசு கப்பல் மற்றும் சுற்றுலாத்துறையிலும் வேலைவாய்ப்பு பெறலாம். ஆரம்பகால மாதாந்திர ஊதியமாக, 20 ஆயிரம் முதல், 22 ஆயிரம் ரூபாய் வரை பெறுவதற்கு வழிவகை செய்யப்படும். பின்னர் திறமைக்கேற்றவாறு பதவி உயர்வின் அடிப்படையில், 50 ஆயிரம் முதல், 70 ஆயிரம் ரூபாய் வரை ஊதிய உயர்வு பெறலாம்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us