/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பலத்த காற்றுடன் மழை பள்ளி மீது சாய்ந்த மரம்
/
பலத்த காற்றுடன் மழை பள்ளி மீது சாய்ந்த மரம்
ADDED : செப் 21, 2025 01:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேன்கனிக்கோட்டை, :கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த குந்துக்கோட்டை பகுதியில், அரசு துவக்கப்பள்ளி இயங்கி வருகிறது.
இப்பள்ளி அருகே சாலையோரம் இருந்த புளியமரம், நேற்று முன்தினம் இரவு பலத்த காற்றுடன் பெய்த மழையால், மரத்தின் ஒரு கிளை முறிந்து பள்ளி கட்டடம் மீது விழுந்தது.
கட்டடத்திற்கு சேதம் ஏதும் ஏற்படவில்லை. சாலையில் மரம் விழுந்திருந்தால், வாகன ஓட்டிகள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும். ஆனால், அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை.