sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

டாடா நிறுவன விடுதியில் ரகசிய கேமரா விவகாரத்தில் இருவருக்கு 'குண்டாஸ்'

/

டாடா நிறுவன விடுதியில் ரகசிய கேமரா விவகாரத்தில் இருவருக்கு 'குண்டாஸ்'

டாடா நிறுவன விடுதியில் ரகசிய கேமரா விவகாரத்தில் இருவருக்கு 'குண்டாஸ்'

டாடா நிறுவன விடுதியில் ரகசிய கேமரா விவகாரத்தில் இருவருக்கு 'குண்டாஸ்'


ADDED : டிச 30, 2025 05:43 AM

Google News

ADDED : டிச 30, 2025 05:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே வன்னியபுரத்தில், ஐபோன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் இயங்குகிறது. இங்கு பணியாற்றும் பெண் தொழிலாளர்களுக்கு, உத்தனப்பள்ளி அடுத்த லாலிக்கல் அருகே, 'விடியல் ரெசிடென்சி' என்ற பெயரில் விடுதி உள்ளது.

இங்குள்ள, 4வது பிளாக்கில், 8வது மாடியில் உள்ள ஒரு குளியலறையில் ரகசிய கேமரா வைக்கப்பட்டு, பெண்கள் குளிப்பதை படம் பிடித்த சம்பவம், நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. கடந்த மாதம், 4 முதல், 6ம் தேதி வரை பெண் தொழிலாளர்கள் வேலைக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ரகசிய கேமரா வைத்ததாக, ஒடிசா மாநிலத்தை சேர்ந்த நீலுகுமாரி குப்தா, 23, மற்றும் அவரது காதலனான பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ரவி பிரதாப் சிங், 29, ஆகிய இருவரை, உத்தனப்பள்ளி போலீசார் கைது செய்தனர். இதில், ரவிபிரதாப் சிங், சேலம் மத்திய சிறையிலும், நீலுகுமாரி குப்தா, கோவை பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய, மாவட்ட எஸ்.பி., தங்கதுரை பரிந்துரை படி, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகல், சிறை நிர்வாகத்திடம் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us