sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 12, 2025 ,ஆவணி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதியில் வாழைத்தார் பரிசல் கவிழ்ந்து 2 பேர் பலி

/

பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதியில் வாழைத்தார் பரிசல் கவிழ்ந்து 2 பேர் பலி

பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதியில் வாழைத்தார் பரிசல் கவிழ்ந்து 2 பேர் பலி

பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதியில் வாழைத்தார் பரிசல் கவிழ்ந்து 2 பேர் பலி


ADDED : ஆக 03, 2025 01:16 AM

Google News

ADDED : ஆக 03, 2025 01:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புன்செய்புளியம்பட்டி பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதியில், வாழைத்தார் ஏற்றி வந்த பரிசல் கவிழ்ந்ததில், இரு தொழிலாளிகள் நீரில் மூழ்கி பலியாகினர். நீச்சல் தெரிந்ததால் ஒரு தொழிலாளி உயிர் தப்பினார்.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை நீர்மட்டம், 101 அடியை எட்டியுள்ளதால், நீர்த்தேக்க பகுதியை ஒட்டிய விவசாய நிலங்களில் பயிரிடப்பட்ட வாழை மரங்கள் நீரில் மூழ்கியுள்ளன. மூழ்கும் தருவாயில் உள்ள வாழை மரங்களிலிருந்து தார்களை வெட்டி எடுக்கும் பணியில்விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த வகையில் அணை நீர்த்தேக்க பகுதியை ஒட்டியுள்ள ஒத்த பனை மரக்காடு கிராமத்தில் வாழைத்தார்களை வெட்ட, பவானி

சாகர், கோடேபாளையம் மணிகண்டன், 18; சத்தியமங்கலம், வடவள்ளி சுரேஷ், 38, சத்தியமங்கலம், கரட்டூர் சக்தி, 32, ஆகியோர், பரிசலில் நேற்று காலை சென்றனர்.

வாழைத்தார்களை வெட்டி எடுத்துக்கொண்டு வால்

கரடு நோக்கி மதியம் புறப்பட்டனர். ஆடி மாத காற்று பலமாக வீசியதாலும், வாழைத்தார் எடையும் அதிகமாக இருந்ததாலும், பரிசல் தலைகுப்புற நீர்த்தேக்க பகுதியில் கவிழ்ந்தது. இதில் மூவரும் தண்ணீரில் மூழ்கினர். இதில் சக்திக்கு நீச்சல் தெரிந்ததால், நீச்சலடித்து கரைக்கு வந்தார். மற்ற இருவரும் நீரில் மூழ்கி மாயமாகினர். ஊருக்குள் சென்று சக்தி தகவல் தெரிவித்த நிலையில், மீனவர்கள் மற்றும் மக்கள், இருவரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். இதில் மதியம், 3:௦௦ மணிக்கு சுரேஷ் உடலும், மாலை, 5:௦௦ மணிக்கு மணிகண்டன் உடலும் மீட்கப்பட்டது. பவானிசாகர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்

. அணை நீர்த்தேக்க பகுதியில் வாழைத்தார் வெட்டும் பணி வழக்கமான ஒன்றாக இருந்தாலும், இதுவரை இதுபோல் விபத்து நடந்ததில்லை. முதல் முறையாக பரிசல் கவிழ்ந்து இருவர் பலியானது, சோகத்தை ஏற்படுத்தி விட்டதாக, விவசாயிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us