sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

இருதரப்பினர் தகராறு; 8 பேருக்கு 'காப்பு'

/

இருதரப்பினர் தகராறு; 8 பேருக்கு 'காப்பு'

இருதரப்பினர் தகராறு; 8 பேருக்கு 'காப்பு'

இருதரப்பினர் தகராறு; 8 பேருக்கு 'காப்பு'


ADDED : நவ 24, 2025 01:01 AM

Google News

ADDED : நவ 24, 2025 01:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராயக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே, பழையூரை சேர்ந்த விவசாயி மாதையன், 38. இவருக்கும், மற்றொரு தரப்பி-னருக்கும் நிலம் தொடர்பாக முன் விரோதம் உள்ளது.

கடந்த, 17ம் தேதி மாலை, 5:00 மணிக்கு, இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் கல்லால் தாக்கி கொண்டனர். இதில், மாதையன் தரப்பை சேர்ந்த அவரது உறவினர்களான ராமன், 50, கமலா, 80, மாதம்மாள், 45, ஆகிய, 3 பேர் காயமடைந்தனர்.மாதையன் புகார் படி, பழையூரை சேர்ந்த சின்னசாமி, 52, அவ-ரது மனைவி காவேரி, 48, மற்றும் நாகம்மாள், 45, கவுரம்மாள், 40, ஆகிய, 4 பேரை, ராயக்கோட்டை போலீசார் நேற்று முன்-தினம் கைது செய்தனர்.

அதேபோல், தன்னையும், தன் உறவினர்களான கவுரம்மாள், நாகம்மாள் ஆகியோரையும், மாதையன் தரப்பினர் தாக்கியதாக, ராயக்கோட்டை போலீசில் காவேரி புகார் செய்தார்.

அதன்படி, ராமன், மாதையன், மாதம்மாள், நந்தினி, 25, ஆகிய, 4 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அனைவரும் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.






      Dinamalar
      Follow us