ADDED : நவ 09, 2024 01:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி, நவ. 9-
ஊத்தங்கரையை சேர்ந்தவர், 17 வயது பிளஸ் 2 மாணவி. கடந்த, 6ல் வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மாயமானார். இது குறித்து மாணவியின் பெற்றோர் ஊத்தங்கரை போலீசில் புகாரளித்தனர். அதில், ஊத்தங்கரையை அடுத்த மிட்டப்பள்ளியை சேர்ந்த, 24 வயது கூலித்தொழிலாளி மீது சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளனர். அதன்படி போலீசார் விசாரிக்கின்றனர்.
சிங்காரப்பேட்டையை அடுத்த கோவிந்தபுரத்தை சேர்ந்தவர் பழனி, 50. இவருக்கும், அவரது கணவருக்கும் அடிக்கடி தகராறு நடப்பது வழக்கம். கடந்த, 5ல், தம்பதியரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், கணவரிடம் கோபித்து கொண்டு பழனி வீட்டிலிருந்து வெளியில் சென்றார்; மீண்டும் வீடு திரும்பவில்லை. பழனியின் தாய் அளித்த புகார்படி சிங்காரப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.