sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

அரசு டவுன் பஸ்சை சிறைபிடித்த கிராம மக்கள்; வனத்துறையினரை கண்டித்து சாலை மறியல்

/

அரசு டவுன் பஸ்சை சிறைபிடித்த கிராம மக்கள்; வனத்துறையினரை கண்டித்து சாலை மறியல்

அரசு டவுன் பஸ்சை சிறைபிடித்த கிராம மக்கள்; வனத்துறையினரை கண்டித்து சாலை மறியல்

அரசு டவுன் பஸ்சை சிறைபிடித்த கிராம மக்கள்; வனத்துறையினரை கண்டித்து சாலை மறியல்


ADDED : மார் 22, 2024 07:12 AM

Google News

ADDED : மார் 22, 2024 07:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேன்கனிக்கோட்டை : தேன்கனிக்கோட்டை அடுத்த பெட்டமுகிலாளம் பஞ்.,ல் உள்ள, 48 குக்கிராமங்களும், காவேரி வடக்கு வன உயிரின சரணாலயத்திற்குள் வருகிறது. அதனால், இக்கிராமங்களில் புதிய போர்வெல் அமைப்பது உள்ளிட்ட வளர்ச்சி பணிகள் ஏதும் செய்ய வேண்டுமென்றால், வனத்துறை அனுமதி பெற வேண்டும். வனப்பகுதிக்குள் உள்ள, 3,000 ஏக்கருக்கும் மேலான பட்டா நிலங்களில் விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். தற்போது கோடையால், கடும் தண்ணீர் தட்டுப்பாடால், பயிர்கள் வாடி வருகின்றன. மக்களும் குடிநீருக்கு அவதிப்படுகின்றனர்.

எனவே, கிட்டாச்சிகள் உதவியுடன் விவசாய கிணறுகளை துார்வார அனுமதிக்க வேண்டும். புதிய போர்வெல்கள் போட்டுக் கொள்ள, வனத்துறை அனுமதி வழங்க வேண்டும் என, விவசாயிகள் கேட்டு வருகின்றனர். ஆனால், வனத்துறை அனுமதி வழங்காமல் இழுத்தடிப்பதால், 25 கோடி ரூபாய் மதிப்பிலான பயிர்கள் கருகி வருவதாக கூறி, கடந்த, 18 ல் துண்டு பிரசுரங்கள் அச்சடித்து, தேர்தலை புறக்கணிக்க போவதாக, கிராம மக்கள் அறிவித்தனர்.

தேன்கனிக்கோட்டை தாசில்தார் பரிமேலழகர், 2 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், பெட்டமுகிலாளம் பஞ்., மக்கள், 100 க்கும் மேற்பட்டோர், அய்யூர் வனத்துறை சோதனைச்சாவடி அருகே நேற்று காலை, 11:30 முதல், மதியம், 1:00 மணி வரை, 36 ம் நம்பர் அரசு டவுன் பஸ்சை சிறைபிடித்து, வனத்துறையை கண்டித்து, சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் அவ்வழியாக வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி., சாந்தி பேச்சுவார்த்தை நடத்தினார். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதால், மக்கள் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us