sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கோவில் நிலம் ஏலம் கிராம மக்கள் எதிர்ப்பு

/

கோவில் நிலம் ஏலம் கிராம மக்கள் எதிர்ப்பு

கோவில் நிலம் ஏலம் கிராம மக்கள் எதிர்ப்பு

கோவில் நிலம் ஏலம் கிராம மக்கள் எதிர்ப்பு


ADDED : நவ 20, 2025 01:36 AM

Google News

ADDED : நவ 20, 2025 01:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பென்னாகரம், பென்னாகரம் அருகே உள்ள ஆதனுாரில் போடி திமிராயசாமி கோவில், கதிரி நரசிம்ம சாமி கோவில் உள்ளது. இவை, ஆதனுார், ரங்காபுரம் பளிஞ்சிரஹள்ளி, பெத்தம்பட்டி, நலப்பரம்பட்டி உள்ளிட்ட, 5 கிராமங்களுக்கு சொந்தமானது. இக்கோவிலுக்கு சுவாமி பெயரில் ஆதனுாரில் தனியாக, 12 ஏக்கர் நிலம் உள்ளது. இதை பராமரித்து, அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து, கோவில் பூஜை மற்றும் திருவிழாக்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஹிந்து சமய அறநிலையத்துறையினர் அந்த நிலத்தை ஏலம் விட நோட்டீஸ் வினியோகம் செய்தனர். ]

இந்நிலையில், கோவில் நிலம் ஏலம் விடுவதை தடுத்து நிறுத்தி, பரம்பரை உரிமையுள்ள, 5 கிராம மக்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தி நேற்று, அதிகாரிகளிடம், கிராம மக்கள், 100க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம், பென்னாகரம் தாசில்தார் சண்முகசுந்தரம், டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுபற்றி ஆர்.டி.ஓ., தலைமையில் இருதரப்பு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தலாம் என தெரிவித்ததை அடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us