/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
குடிநீருக்கு அலையும் கிராம மக்கள்
/
குடிநீருக்கு அலையும் கிராம மக்கள்
ADDED : நவ 09, 2025 03:41 AM
போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார் ஒன்றியம், வாணிப்பட்டி பஞ்., ரெட்டிப்பட்டியில், 100க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு கடந்த, 6 மாதங்களுக்கு முன், குடி தண்ணீர் வழங்க ஜல்ஜீவன் திட்டத்தில், குழாய் அமைக்கப்பட்டது. ஆனால், அதன் மூலம் தண்ணீர் வினி-யோகம் செய்தால், பைப்லைனில் ஆங்காங்கே உடைப்பு ஏற்-பட்டு, தண்ணீர் வினியோகம் செய்ய முடியாமல் நிறுத்தப்பட்-டது.
இதனால், அப்பகுதி மக்கள் கடந்த, 6 மாதங்களாக குடிநீருக்கு, விவசாய கிணறுகளுக்கு சென்று, தண்ணீர் எடுத்து வரும் அவல நிலை ஏற்பட்டது. இதனால், காலை நேரத்தில் மாணவ, மாணவியர் பள்ளி, கல்லுா-ரிகளுக்கு செல்ல காலதாமதம் ஆகி வருகிறது. பெண்கள் அன்-றாட பணிகளுக்கு செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர்.
வேறு வழியின்றி, தற்போது கடந்த ஒரு வாரமாக சாலையோர-முள்ள போர்வெல்லை கழட்டி மின்மோட்டாரை இயக்கி, தண்ணீர் பிடித்து வருகின்றனர். சம்மந்தப்பட்ட நிர்வாகம் உடன-டியாக அப்பகுதிக்கு தண்ணீர் வழங்க
நடவடிக்கை எடுக்க, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

