ADDED : அக் 28, 2025 01:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒகேனக்கல், கர்நாடகா மற்றும் தமிழக நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து குறைந்துள்ளது.
தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு வினாடிக்கு, 28,000 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலை, 6:00 மணிக்கு, 18,000 கன அடியாக சரிந்தது. இதனால், அங்குள்ள மெயின் பால்ஸ், மெயின் அருவி, சினி பால்ஸ், ஐந்தருவி, ஐவர்பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் குறைந்து சீராக கொட்டியது.

