/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஒகேனக்கல்லில் நீர்வரத்து 24,000 கன அடியாக சரிவு
/
ஒகேனக்கல்லில் நீர்வரத்து 24,000 கன அடியாக சரிவு
ADDED : டிச 05, 2024 07:11 AM
ஒகேனக்கல் : கர்நாடகா மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான அஞ்-செட்டி, நாட்றாம்பாளையம், கேரிட்டி,
பிலிகுண்டுலு, ராசிமணல் உள்ளிட்ட இடங்களில் பெய்த மழையால், ஒகேனக்கல் காவிரி-யாற்றில் அதிகரித்து
வந்த நீர்வரத்து, நேற்று மழையின்றி சரிந்தது. தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு வினாடிக்கு, 28,000 கன
அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று மாலை 5:00 மணிக்கு, 24,000 கன அடியாக சரிந்-தது. நீர்வரத்து, 24,000 கன
அடியாக இருந்ததால், மெயின் பால்ஸ், மெயின் அருவி, ஐந்தருவி, ஐவர்பாணி, சினி பால்ஸ், உள்ளிட்ட
அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. நேற்று, 2 வது நாளாக காவிரியாற்றில் குளிக்கவும், பரிசல்
இயக்-கவும், தர்மபுரி மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. தொடர்ந்து, மெயின் அருவிக்கு செல்லும் நடைப்பாதை
மூடப்பட்டு, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.