sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கே.ஈச்சம்பாடி தடுப்பணையில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்

/

கே.ஈச்சம்பாடி தடுப்பணையில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்

கே.ஈச்சம்பாடி தடுப்பணையில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்

கே.ஈச்சம்பாடி தடுப்பணையில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்


ADDED : செப் 21, 2025 01:28 AM

Google News

ADDED : செப் 21, 2025 01:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பைநல்லுார் :கம்பைநல்லுார் அருகே, கே.ஈச்சம்பாடி தடுப்பணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லுார் அடுத்த கே.ஈச்சம்பாடியில், தென்பெண்ணையாற்றின் குறுக்கே தடுப்பணை உள்ளது.

இதிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம், ஈச்சம்பாடி, பெரமாண்டப்பட்டி, சாமண்டஹள்ளி, நவலை உள்ளிட்ட தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த, 10 கிராமங்கள், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த, 22 கிராமங்கள் என, 32 கிராமங்களிலுள்ள, 6,250 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெற்று வருகின்றன.

இந்நிலையில், தென்பெண்ணையாற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை மற்றும் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையிலிருந்து திறந்து விடப்பட்ட நீரால், கே.ஈச்சம்பாடி தடுப்பணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் தடுப்பணைக்கு, 1,200 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 2,000 கன அடியாக அதிகரித்து இருந்தது. இதனால், கே.ஈச்சம்பாடி தடுப்பணையில், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தென்பெண்ணையாற்றில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், ஆற்றங்கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில், வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us