sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ஒகேனக்கல்லில் நீர்வரத்து 4000 கன அடியாக உயர்வு

/

ஒகேனக்கல்லில் நீர்வரத்து 4000 கன அடியாக உயர்வு

ஒகேனக்கல்லில் நீர்வரத்து 4000 கன அடியாக உயர்வு

ஒகேனக்கல்லில் நீர்வரத்து 4000 கன அடியாக உயர்வு


ADDED : ஏப் 20, 2025 07:08 AM

Google News

ADDED : ஏப் 20, 2025 07:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒகேனக்கல்: ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து நேற்று மாலை வினாடிக்கு, 4000 கன அடியாக அதிகரித்துள்ளது. தமிழக - கர்நாடக நீர்பிடிப்பு பகுதிகளில் மழையின்றி கடும் வறட்சியால், தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து, சமீப காலமாக கடுமையாக சரிந்து கொண்டே வந்தது. இதனால், ஒகேனக்கல் காவிரியாற்றில் நீரின்றி ஆங்காங்கே பாறைகளாக காட்சி அளித்தது.

இந்நிலையில் கடந்த, 2 நாட்களாக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை மற்றும் கர்நாடக அணைகளில் இருந்து குடிநீருக்காக திறக்கப்பட்ட நீரால், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில், நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு வினாடிக்கு, 2000 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று மாலை, 4:30 மணிக்கு, 4000 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் மெயின் அருவி, சினி பால்ஸ், மெயின் பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

கோடைக்காலம் துவங்கிய நிலையில், நீர்வரத்து அதிகரித்து உள்ளதால், ஒகேனக்கல்லில் உள்ள வியாபாரிகள், பரிசல் ஓட்டிகள், மசாஜ் தொழிலாளர்கள் என பல தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us