/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
/
கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
ADDED : ஜூலை 03, 2025 01:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று முன்தினம், 541 கன அடி நீர்வரத்து இருந்தது. கர்நாடகா மாநில நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால், நேற்று காலை நீர்வரத்து சற்று அதிகரித்து, 621 கன அடியாக உயர்ந்தது
. நேற்று காலை நிலவரப்படி, அணையின் மொத்த உயரமான, 44.28 அடியில், 40.67 அடிக்கு நீர் இருப்பு இருந்தது. அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில், 621 கன அடி நீர் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டது. அதனால் ரசாயன நுரை மற்றும் துர்நாற்றத்துடன் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.