/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து சரிவு
/
கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து சரிவு
ADDED : மே 27, 2025 01:58 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்ட பகுதிகள் மற்றும் தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு கடந்த, 20ல் வினாடிக்கு, 4,208 கன அடியாக நீர்வரத்து இருந்தது. பின் மழையின்றி நேற்று முன்தினம், 1,312 கன அடியாகவும் நேற்று, 970 கன அடியாகவும் சரிந்தது. அணை நீர்மட்டம் மொத்தமுள்ள, 5
2 அடியில் நேற்று, 50.95 அடியாக இருந்தது. அணைக்கு தொடர்ந்து நீர்வரத்தால், 7வது நாளாக நேற்றும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை என, 3 மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் யாரும் ஆற்றை கடக்க வேண்டாம் என, பொதுப்பணித்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர். கிருஷ்ணகிரியில் கடந்த, 3 நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், லேசான மழை மட்டும் பெய்தது.