sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

/

கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு


ADDED : ஜூன் 28, 2025 03:57 AM

Google News

ADDED : ஜூன் 28, 2025 03:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் மற்றும் கர்நாடகா மாநிலம் பெங்களூ-ருவில் கடந்த மாதம் பெய்த மழையால், கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. பின்னர் போதிய மழையின்றி வேகமாக நீர்வரத்து சரிந்தது.

கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதி மற்றும் பெங்களூருவில் பெய்த மழை காரண-மாக கே.ஆர்.பி., அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்துள்-ளது. அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு, 309 கன அடிநீர் வந்த நிலையில் நேற்று, 313 கன அடியாக அதிகரித்தது. அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில், 301 கனஅடியும், பாசன கால்வாயில், 12 கன அடியும் என மொத்தம், 313 கனஅ-டிநீர் திறக்கப்பட்டுள்ளது. அணை மொத்த உயரமான, 52 அடியில் நேற்று, 50.95 அடியாக நீர்மட்டம் இருந்தது. கிருஷ்ண-கிரியில் கடந்த ஒரு வாரமாக வானம் மேகமூட்டத்துடன் இருண்டு காணப்பட்டாலும், மழை பெய்யாததால் பொதுமக்கள், விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.பாரூர் பெரிய ஏரியின் மொத்த உயரமான, 15.60 அடிக்கு முழு கொள்ளளவில் தண்ணீர் இருப்பு உள்ளதால் ஏரிக்கு வந்து கொண்-டிருக்கும், 14 கன அடிநீர் கால்வாயில் திறக்கப்பட்டுள்ளது. ஊத்-தங்கரை பாம்பாறு அணை மொத்த உயரமான, 19.60 அடியில், 8.84 அடிக்கு தண்ணீர் உள்ளது. அதே போல், சூளகிரி சின்னாறு அணை மொத்த உயரமான, 32.80 அடியில், 8.01 அடிக்கு தண்ணீர் உள்ளது. இரண்டு அணைகளுக்கும் நீர்வரத்தும் இல்லை. நீர்திறப்பும் இல்லை.






      Dinamalar
      Follow us