/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கெலவரப்பள்ளி அணையில் நீர்திறப்பு தென்பெண்ணையாற்றில் வெள்ளம்
/
கெலவரப்பள்ளி அணையில் நீர்திறப்பு தென்பெண்ணையாற்றில் வெள்ளம்
கெலவரப்பள்ளி அணையில் நீர்திறப்பு தென்பெண்ணையாற்றில் வெள்ளம்
கெலவரப்பள்ளி அணையில் நீர்திறப்பு தென்பெண்ணையாற்றில் வெள்ளம்
ADDED : ஆக 11, 2025 08:05 AM
ஓசூர்: ஓசூர், கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்த நிலையில், தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று முன்தினம், 863 கன அடி நீர்வரத்து இருந்தது. கர்நாடகா மாநில நீர்பிடிப்பு பகுதி மற்றும் அணை பகுதியில் பெய்த மழையால், நேற்று காலை நீர்வரத்து அதிகரித்து, 1154 கன அடியாக உயர்ந்தது. அணையின் மொத்த உயரமான, 44.28 அடியில், 41.66 அடிக்கு நீர் இருப்பு இருந்தது. அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில், 1,066 கன அடி, வலது, இடது கால்வாயில் பாசனத்திற்கு, 88 கன அடி என மொத்தம், 1,154 கன அடி நீர் திறந்து
விடப்பட்டது. தென்பெண்ணை ஆற்றில், 1,000 கன அடிக்கு மேல் நீர் திறக்கப்பட்டதால், ரசாயன நுரையுடன் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், துணி துவைக்கவோ, ஆடு, மாடுகளை சுத்தம் செய்யவோ, ஆற்றை கடக்கவோ வேண்டாம் என, வருவாய்த்துறையினர் எச்சரித்தனர்.