sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக மழை கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

/

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக மழை கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக மழை கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக மழை கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு


ADDED : செப் 19, 2025 01:04 AM

Google News

ADDED : செப் 19, 2025 01:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி, மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால், கே.ஆர்.பி., அணைக்கு நீர்

வரத்து அதிகரித்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த, 7 முதல், 18 வரை மொத்தம், 12 நாட்களில், 9 நாட்கள் மிதமானது முதல் பலத்த மழை பெய்துள்ளது. இதில் மொத்தம், 771.5 மி.மீ., மழை பதிவாகி உள்ளதால் ஏரி, குளம் மற்றும் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

கே.ஆர்.பி., அணைக்கு நேற்று முன்தினம், 587 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று, 806 கன அடியாக அதிகரித்தது. அணையில் இருந்து பாசன கால்வாய்களில், 179 கன அடி, தென்பெண்ணை ஆற்றில், 627 கன அடி என மொத்தம், 806 கன அடிநீர் வெளியேற்றப்பட்டுள்ளது. அணை நீர்மட்டம் மொத்தமுள்ள, 52 அடியில் நேற்று, 49.10 அடியாக இருந்தது.

நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக ஓசூரில், 43 மி.மீ., மழை பதிவாகி இருந்தது. அதே போல், கே.ஆர்.பி., அணை, 26.80, நெடுங்கல், 26, போச்சம்பள்ளி, 25.10, தேன்கனிக்கோட்டை, 12, பாரூர், 11.60, அஞ்செட்டி, 10.60, ராயக்கோட்டை, 10, தளி, 10, கெலவரப்பள்ளி அணை, 5.50, பெனுகொண்டாபுரம், 5.20, பாம்பாறு அணை, 5, கிருஷ்ணகிரி, 4.60, ஊத்தங்கரை, 4.20, சின்னாறு அணை, 2, சூளகிரி, 1.50, என மொத்தம், 203.10 மி.மீ., மழை பதிவாகி இருந்தது.






      Dinamalar
      Follow us