ADDED : டிச 04, 2025 07:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கெலமங்கலம்,கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே வெங்கடாபுரத்தை சேர்ந்தவர் பிரவீன்குமார். இவருக்கும், காயத்ரி, 25, என்பவருக்கும் கடந்த, 5 ஆண்டுக்கு முன்
திருமணமானது.
இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. தம்பதிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டதால், விரக்தியடைந்த காயத்ரி கடந்த, 6 மாதங்களுக்கு முன், தன் தாய் வீட்டிற்கு சென்றார். மனமுடைந்த அவர், நேற்று முன்தினம் மதியம், 1:00 மணிக்கு, வீட்டிலுள்ள, 8 அடி ஆழ தண்ணீர் தொட்டியில் குதித்து, தற்கொலை செய்து கொண்டார்.
கெலமங்கலம் போலீசார் வழக்குப் பதிந்தனர். திருமணமான, 5 ஆண்டுகளில் பெண் தற்கொலை செய்ததால், ஓசூர் சப்- கலெக்டர் ஆக்ரிதி சேத்தி விசாரிக்கிறார்.

