/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பக்தர்களிடம் மடிசோறு பெறும் பெண்கள் குழந்தை வரம் வேண்டி நுாதன வழிபாடு
/
பக்தர்களிடம் மடிசோறு பெறும் பெண்கள் குழந்தை வரம் வேண்டி நுாதன வழிபாடு
பக்தர்களிடம் மடிசோறு பெறும் பெண்கள் குழந்தை வரம் வேண்டி நுாதன வழிபாடு
பக்தர்களிடம் மடிசோறு பெறும் பெண்கள் குழந்தை வரம் வேண்டி நுாதன வழிபாடு
ADDED : பிப் 16, 2025 03:13 AM
காங்கேயம்: திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்கு, தைப்பூ-சத்தை ஒட்டி பல லட்சக்கணக்கான பக்தர்கள், மாநிலத்தின் பல்-வேறு பகுதிகளில் இருந்தும் பாதயாத்திரை மேற்கொண்டுள்-ளனர். இதில் பல பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தவும், பிரார்த்-தனை செய்தும் காவடி எடுத்து செல்கின்றனர். இதில் சேலம் மாவட்டம் இடைப்பாடி பருவவதராஜ குல மக்கள் முருகப்பெரு-மானை மருமகன் எனக்கூறி, 150 ஆண்டுகளுக்கும் மேலாக பரம்-பரை, பரம்பரையாக பாதயாத்திரை மேற்கொண்டுள்ளனர்.
பள்ளிபாளையம், சென்னிமலை, காங்கேயம், வட்டமலை, தாரா-புரம் வழியாக பழனி செல்லும் இவர்கள், இந்த ஊர்களில் சொந்-தமாக இடம் வாங்கி வைத்துள்ளனர். அந்த இடத்தில் காவடி-யுடன் தங்கி சாப்பிடுவது வழக்கம். இந்த இடங்களில் சாப்பிடும் முருக பக்தர்களிடம், குழந்தை வரம் வேண்டியும், திருமணம் கைகூடவும், மடி ஏந்தி சாப்பாடு வாங்கி சாப்பிட்டு விரதம் விடும் முறையை பெண்கள் கடைபிடிக்கின்றனர். இந்நிலையில் காங்கேயம் அருகே வட்டமலை முருகன் கோவிலில், இடைப்-பாடி பாதயாத்திரை பக்தர்கள் நேற்று தங்கி சாப்பிட்டனர். இவர்க-ளிடம் ஏராளமான பெண்கள், மடி சோறு வாங்க குவிந்தனர்.

