/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தென்பெண்ணை ஆற்றில் 2 லட்சம் மீன்குஞ்சுகள் இருப்பு செய்யும் பணி
/
தென்பெண்ணை ஆற்றில் 2 லட்சம் மீன்குஞ்சுகள் இருப்பு செய்யும் பணி
தென்பெண்ணை ஆற்றில் 2 லட்சம் மீன்குஞ்சுகள் இருப்பு செய்யும் பணி
தென்பெண்ணை ஆற்றில் 2 லட்சம் மீன்குஞ்சுகள் இருப்பு செய்யும் பணி
ADDED : ஜூலை 18, 2025 01:32 AM
கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம் ஒன்றியம், பெண்ணேஸ்வர மடம் தென்பெண்ணையாற்றில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில், மீன்வளத்தை அதிகரிக்கும் வகையில் முதற்கட்டமாக, 2 லட்சம் வளர்ந்த பெருரக நாட்டின கெண்டை மீன்குஞ்சுகள் ஆற்றில் இருப்பு செய்யும் பணியை மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் துவக்கி வைத்தார்.
தொடர்ந்து அவர் பேசியதாவது: கிருஷ்ணகிரி மீன் பண்ணைகளில் வளர்க்கப்படும் மீன்குஞ்சுகள் தென்பெண்ணையாறு மற்றும் காவிரி ஆற்றில் விடப்பட்டு வருகிறது. கடந்த, 2023ல், 3 லட்சம் மீன்குஞ்சுகள் வளர்த்தெடுத்து தென்பெண்ணையாறு மற்றும் காவிரி ஆற்றில் விடப்பட்டது. மீன்நுகர்வு அதிகரித்ததால், கூடுதலாக மீன்குஞ்சு வளர்த்து, ஆற்றில் விட மீனவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க, 2024-ல், 4 லட்சம் மீன்குஞ்சு
கள் ஆற்றில் விடப்பட்டன. நடப்பாண்டில், 12 லட்சம் ரூபாய் மதிப்பில், 4 லட்சம் மீன் குஞ்சுகள் ஆற்றில் விட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, முதற்கட்டமாக, 2 லட்சம் மீன் குஞ்சுகள் ஆற்றில் இருப்பு செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் ரத்தினம், ஆய்வாளர்கள் கதிர்வேல், கோகிலாமணி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

