/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கடித்த பாம்பை அடித்து கொன்று கையோடு எடுத்துவந்த தொழிலாளி
/
கடித்த பாம்பை அடித்து கொன்று கையோடு எடுத்துவந்த தொழிலாளி
கடித்த பாம்பை அடித்து கொன்று கையோடு எடுத்துவந்த தொழிலாளி
கடித்த பாம்பை அடித்து கொன்று கையோடு எடுத்துவந்த தொழிலாளி
ADDED : ஜன 25, 2025 02:22 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே சப்படி கிராமத்தை சேர்ந்தவர் ரவி, 35; ஓட்டலில் வேலை செய்கிறார். நேற்று முன்-தினம் ஓட்டலை சுற்றியிருந்த செடி, கொடிகளை அகற்றி சுத்தம் செய்தார். அப்போது, செடி, கொடி மறைவில் இருந்த கண்ணாடி விரியன் பாம்பு, ரவியை கடித்தது. அதிர்ச்சியடைந்த அவர், தன்-னிடம் இருந்து மண்வெட்டியால் பாம்பை அடித்து கொன்று, ஒரு பையில் போட்டு எடுத்து கொண்டு, காமன்தொட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றார்.
அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, ஓசூர் அரசு மருத்-துவமனைக்கு டாக்டர் அனுப்பினார். அங்கு தன் நண்பருடன் வந்த ரவி, கையில் உயிரிழந்த பாம்பை எடுத்து வந்து, டாக்ட-ரிடம் நடந்த விபரங்களை கூறினார். அவரை டாக்டர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை பிரிவில் அனும-தித்து சிகிச்சையளித்தனர். ரத்த பரிசோதனை செய்யப்பட்டு, ஒரு நாள் மருத்துவர் கண்காணிப்பில் இருக்க ரவியை அறிவுறுத்தினர்.

