ADDED : ஜூலை 03, 2025 01:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி, பர்கூர் அடுத்த மேல்பூங்குருத்தியை சேர்ந்தவர் சங்கரன், 37, கூலித்தொழிலாளி. இவரும் கேசவன், 29 என்பவரும், பல்சர் பைக்கில் கடந்த, 30 இரவு கிருஷ்ணகிரி - குப்பம் சாலை வரட்டனப்பள்ளி அருகே சென்று கொண்டிருந்தனர்.
அவ்வழியாக வந்த லாரி, பைக் மீது மோதியது. இதில், சங்கரன், கேசவன் இருவரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இதில் சங்கரன் நேற்று முன்தினம் இறந்தார். கேசவன் சிகிச்சை பெற்று வருகிறார். கந்திகுப்பம் போலீசார் விசாரிக்கின்றனர்.