/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
யாரப் தர்கா உரூஸ் திருவிழா இஸ்லாமிய, இந்து மக்கள் வழிபாடு
/
யாரப் தர்கா உரூஸ் திருவிழா இஸ்லாமிய, இந்து மக்கள் வழிபாடு
யாரப் தர்கா உரூஸ் திருவிழா இஸ்லாமிய, இந்து மக்கள் வழிபாடு
யாரப் தர்கா உரூஸ் திருவிழா இஸ்லாமிய, இந்து மக்கள் வழிபாடு
ADDED : ஜூலை 26, 2025 12:52 AM
ஓசூர், தேன்கனிக்கோட்டை யில் நடந்த, யாரப் தர்கா சந்தன குட உரூஸ் திருவிழாவில், இஸ்லாமிய, இந்து மக்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் உள்ள பழமையான யாரப் தர்காவில், 76ம் ஆண்டு சந்தன குட உரூஸ் திருவிழா நடந்தது. நேற்று முன்தினம் இரவு, அலங்கரிக்கப்பட்ட யானையின் மீது சந்தன குட ஊர்வலம் புறப்பட்டது. அலங்கார வண்டிகள், சிலம்பாட்டம், புக்ரா மற்றும் பேண்ட் வாத்தியங்கள் இசைக்க, மின் அலங்காரங்கள் மற்றும் பூ அலங்காரத்துடன் யானையின் மீது சந்தன குடத்தை வைத்து, தேன்கனிக்கோட்டை பஸ் ஸ்டாண்ட், காந்தி சிலை, நேதாஜி சாலை, நேரு சாலை, மேல்கோட்டை உட்பட நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற ஊர்வலம், நேற்று அதிகாலை யாரப் தர்காவை வந்தடைந்தது.
தொடர்ந்து சந்தன பூச்சு, பூ அலங்காரம், பாத்தியா துவா ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. தேன்கனிக்கோட்டை, ஓசூர், அஞ்செட்டி சுற்று வட்டார கிராம மக்கள் மட்டுமின்றி, கர்நாடகா, ஆந்திரா மாநிலத்தில் இருந்து வந்திருந்த ஏராளமான இஸ்லாமிய மற்றும் குந்து மக்கள் வழிபாடு நடத்தினர். நேற்று யாரப் தர்காவில் உரூஸ் திருவிழா நடந்தது. விழாவையொட்டி இசை கச்சேரிகள் நடந்தன. ஏற்பாடுகளை, யாரப் தர்கா முத்தவல்லி முஜம்மில் பாஷா, செயலாளர் மஹபூப் கான் மற்றும் நிர்வாகிகள்
செய்திருந்தனர்.