/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
யோகி ராம்சுரத்குமார் ஆராதனை விழா
/
யோகி ராம்சுரத்குமார் ஆராதனை விழா
ADDED : பிப் 22, 2026 04:33 AM

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில், தளி சாலையிலுள்ள ராம்ஜி காலனியில், பகவான் யோகி ராம்சுரத்குமார் பஜனை மந்திர் உள்-ளது. இங்கு, 25ம் ஆண்டு ஆராதனை விழா இரு நாட் கள் நடந்-தன. நேற்று முன்தினம் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக பூஜை, நாம-ஜெபம், வினோத் நாராயணசாமி குழுவினரின் நாதஸ்வரம் மற்றும் தவில் மங்கள வாத்திய நிகழ்ச்சி நடந்தன.
தொடர்ந்து, ஓசூர் ராம்ஜி பஜனை குழுவின் தலைவர் குப்புசாமி மற்றும் கும்மளாபுரம் துருவ நாராயணா மற்றும் ஹரி வாத்திய இசையுடன் கூடிய பஜனை நிகழ்ச்சி, பஜனை மந்திர் தலைவர் கவிஞர் ராம்ஜி ரத்தினகுமாரின் தலைமை உரை நிகழ்ச்சி மற்றும் கடலுார் காயத்திரியின் கர்நாடக சங்கீதம் நடந்தன.திண்டுக்கல் யோகி நாமாலய நிறுவனர் பேராசிரியர் திண்-ணப்பன் தன் சொற்பொழிவில், அறிய ஆன்மிக கருத்துக்களும், பகவானின் பல அனுபவங்களையும் எடுத்துரைத்தார். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை, ஓசூர் யோகி ராம்சுரத்குமார் பஜனை மந்திர் தலைவர் ராம்ஜி ரத்தினகுமார், பொதுச்செயலாளர் அண்ணாமலை, பொருளாளர் உதயகுமார் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

