sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கறவை மாடு வளர்ப்பு, மண்புழு உரம் இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

/

கறவை மாடு வளர்ப்பு, மண்புழு உரம் இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

கறவை மாடு வளர்ப்பு, மண்புழு உரம் இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

கறவை மாடு வளர்ப்பு, மண்புழு உரம் இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்


ADDED : ஆக 05, 2025 01:22 AM

Google News

ADDED : ஆக 05, 2025 01:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி, இந்தியன் வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில், இலவச கறவை மாடு வளர்ப்பு, பால் பண்ணை மற்றும் மண்புழு உரம் தயாரிக்க பயிற்சி வழங்கப்படுகிறது.

இது குறித்து, அந்நிறுவன இயக்குனர் வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கை:

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணை பகுதியிலுள்ள இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில், வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் கிராமப்புற பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு தொழில் துவங்க, பல்வேறு இலவச பயிற்சிகள் வழங்கப்படுகிறது. தற்போது, 30 நாட்கள் ஆண், பெண் இருபாலருக்கும், கறவை மாடு வளர்ப்பு, பால் பண்ணை மற்றும் மண்புழு உரம் தயாரிப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்கு, 5ம் வகுப்பு படித்த, 18 முதல், 45 வயது வரை உள்ளவர்கள் வரும், 7க்குள் நேரில் வந்து விண்ணப்பித்து பயிற்சியில் சேரலாம்.

பயிற்சியில், சீருடை, காலை, மதியம் உணவும், பயிற்சிக்கான உபகரணங்களும் இலவசமாக வழங்கப்படும். பயிற்சி, காலை, 9:30 மணி முதல் மாலை, 5:30 மணி வரை நடக்கும். முடிவில் பயிற்சி சான்றிதழும், தேர்ச்சி சான்றிதழும் வழங்கப்படும்.

மேலும் விபரங்களுக்கு, இயக்குனர், இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், டிரைசெம் கட்டடம், கே.ஆர்.பி., அணை, கிருஷ்ணகிரி, என்ற முகவரியிலும், மேலும், 94422 47921, 90806 76557 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us