ADDED : நவ 30, 2024 02:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த உத்தனப்பள்ளி அருகே கனிஞ்சூரை சேர்ந்தவர் கோபால், 61, விவசாயி; இவர் கடந்த, 27 மாலை, 6:00 மணிக்கு தனது வீட்டின் அருகே கறவை மாட்டை கட்டி வைத்திருந்தார்.
அடுத்த நாள் அதிகாலை, 4:00 மணிக்கு பார்த்த போது மாட்டை காணவில்லை. மர்ம நபர்கள் திருடி சென்றதை அறிந்த கோபால், உத்தனப்பள்ளி போலீசில் புகார் செய்தார். விசாரணையில், சூள-கிரி அருகே சின்ன பேட்டகானப்பள்ளியை சேர்ந்த மூர்த்தி, 25, என்பவர் மாட்டை திருடியது, தெரிந்தது. அவரை நேற்று முன்-தினம் கைது செய்த போலீசார், மாட்டை மீட்டனர்.