sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ராணுவ வீரர் காதலியுடன் தற்கொலை

/

ராணுவ வீரர் காதலியுடன் தற்கொலை

ராணுவ வீரர் காதலியுடன் தற்கொலை

ராணுவ வீரர் காதலியுடன் தற்கொலை


ADDED : ஜூலை 12, 2011 12:17 AM

Google News

ADDED : ஜூலை 12, 2011 12:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எழுமலை : சேடப்பட்டி அருகே ராணுவ வீரர் தன் காதலியுடன் தற்கொலை செய்து கொண்டார்.

சேடப்பட்டி அருகே உள்ள டி. மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் வடிவேல் (40). இவர் ராணுவத்தில் பணிபுரிகிறார். 17 ஆண்டுகளுக்கு முன் தனது அக்கா மகள் ஜெயலட்சுமியை திருமணம் செய்தார். இவருக்கு குழந்தை இல்லை. வடிவேல் மருத்துவ பரிசோதனை செய்ததில் தனக்கு குழந்தை பாக்கியம் கிடையாது என்பது சோதனையில் தெரிய வந்தது. பின்னர் எ.தொட்டியபட்டியைச் சேர்ந்த செல்வி என்பவரை 2 வது திருமணம் செய்தார். இவருக்கும் குழந்தைஇல்லை. இந்நிலையில் தனது மனைவி செல்வியின் தங்கை மீனாட்சியை காதலித்து அவருடன் தொடர்பு வைத்திருந்தார் வடிவேல். இதையறிந்த செல்வி தனது தங்கை மீனாட்சியுடன் தகராறு செய்தார். தனது கணவரை தங்கையிடம் இருந்து மீட்டித் தாருங்கள் என திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். முதல் மனைவி ஜெயலட்சுமி, தனக்கு தனது கணவர் வடிவேல் ஜீவனாம்சம் தர வேண்டும் எனக் கோரி உசிலம்பட்டி ஜே.எம்., கோர்ட்டில் வழக்கு தொடுத்தார். மனமுடைந்த வடிவேல் தனது காதலி மீனாட்சியை டி. மீனாட்சிபுரத்தில் உள்ள தனது தோட்டத்திற்கு அழைத்து சென்றார். அங்கு இருவரும் விஷமருந்தினர். சிகிச்சை பலனின்றி இறந்தனர். சேடப்பட்டி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.










      Dinamalar
      Follow us