sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 02, 2026 ,தை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

டயர் விலை கடும் உயர்வு

/

டயர் விலை கடும் உயர்வு

டயர் விலை கடும் உயர்வு

டயர் விலை கடும் உயர்வு


ADDED : ஜூலை 13, 2011 03:58 AM

Google News

ADDED : ஜூலை 13, 2011 03:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை:டயர் விலை அபரிமிதமாக உயர்ந்துள்ளதால், ஆட்டோ மொபைல் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.சரக்கு போக்குவரத்திற்கு முக்கியமான கனரக வாகனங்களின் டயர் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இயற்கை ரப்பர் உட்பட மூலப்பொருட்களின் விலை உயர்வால் டயர் விலையும் உயர்கிறது என காரணம் கூறப்பட்டாலும், இவ்விலை உயர்வு, ஆட்டோ மொபைல் தொழிலை பாதித்துள்ளது. சென்ற மார்ச் மாதம் ஒரு ஜோடி லாரி டயர் விலை 27,800 ரூபாயாக இருந்தது. தற்போது இது 34,500 ரூபாயாக அதிகரித்துள்ளது.இந்நிலையில், டயர் மீதான வரியையும் 12.5 சதவீதத்தில் இருந்து 14.5 சதவீதமாக தமிழக அரசு உயர்த்தி உள்ளதால், டயர் விலை மேலும் 700 ரூபாய் அதிகரித்துள்ளது. இது போதாது என்று வாட் வரியும் உயர்த்தப்பட்டுள்ளது.தமிழகத்தில் இந்நிலை என்றால், புதுச்சேரியில் ஒரு ஜோடி டயர் மீது 8 சதவீதம் மட்டுமே வரி விதிக்கப்படுகிறது. இதனால், தமிழகத்தை விட, அங்கு டயர் விலை 2000 ரூபாய் குறைவு. எனவே, பலரும் புதுச்சேரியில் டயர்களை வாங்குகின்றனர். இதனால், தமிழகத்தில் உள்ள ஆட்டோமொபைல் வர்த்தக நிறுவனங்கள் பாதிக்கப்படுகின்றன. மதுரையில் மட்டும் 400 ஆட்டோமொபைல் உதிரி பாக விற்பனை நிறுவனங்கள் உள்ளன.இவற்றின் விற்பனையும் பாதிக்கப்பட்டுள்ளது.

மதுரை டயர் வர்த்தகர் விவேக் சிதம்பரம் கூறும்போது, ''முன்பெல்லாம் ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் வாங்க, மற்ற மாநிலத்தவர் தமிழகம் வருவர். இப்போது மற்ற மாநிலங்களுக்கு நாம் செல்ல வேண்டி உள்ளது. இவ்விலை உயர்வு பொதுமக்களையும் பாதிக்கும். லாரி வாடகை உயர்ந்து, பொருட்களின் விலையும் உயரும். மணல், செங்கல் விலை மேலும் அதிகரிக்கும். எனவே, வரி உயர்வை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us