sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மதுரை ரேஸ்கோர்ஸில் விளையாடும் வீரர்களுக்கு சொட்டு குடிநீர் இல்லை: பயிற்சியின் போது தாகம் தீரவழியின்றி தவிப்பு

/

மதுரை ரேஸ்கோர்ஸில் விளையாடும் வீரர்களுக்கு சொட்டு குடிநீர் இல்லை: பயிற்சியின் போது தாகம் தீரவழியின்றி தவிப்பு

மதுரை ரேஸ்கோர்ஸில் விளையாடும் வீரர்களுக்கு சொட்டு குடிநீர் இல்லை: பயிற்சியின் போது தாகம் தீரவழியின்றி தவிப்பு

மதுரை ரேஸ்கோர்ஸில் விளையாடும் வீரர்களுக்கு சொட்டு குடிநீர் இல்லை: பயிற்சியின் போது தாகம் தீரவழியின்றி தவிப்பு


ADDED : மார் 11, 2025 05:18 AM

Google News

ADDED : மார் 11, 2025 05:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் ஒரே இடத்தில் அனைத்து விளையாட்டுக்கான அரங்குகள் இருந்தாலும் குடிப்பதற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லாத அவலம் நீடிக்கிறது.

இங்குள்ள விளையாட்டு விடுதி வளாகத்தில் 140 மாணவர்கள் தங்கியுள்ளனர். தடகளம், வாலிபால், கூடைப்பந்து, ஜிம்னாஸ்டிக், நீச்சல் உட்பட பல்வேறு விளையாட்டுகளுக்காக ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் வெளியில் இருந்து பயிற்சிக்கு வருகின்றனர்.

சில வகை விளையாட்டுகளுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கட்டணம் நிர்ணயித்துள்ளது. ஆனால் சொட்டு குடிநீர் கூட இங்கு இல்லை என்பதால் பயிற்சி பெறுவோர் பாட்டிலில் தண்ணீர் கொண்டு வந்தாலும் போதாமல் தவிக்கின்றனர். கோடை துவங்கி விட்டதால் வீரர்கள் தண்ணீர் தேவை அதிகமுள்ளது. இதற்காக அலைந்து திரிந்து விலைக்கு வாங்கி வர வேண்டியுள்ளது.

ரேஸ்கோர்ஸ் வளாகத்தில் மாநகராட்சி குடிநீர் இணைப்பு ஒன்று கூட இல்லை என்பதே இதற்கு காரணம். தற்போது கூடுதலாக மாற்றுத்திறனாளிகளுக்கான மினி மைதானமும் அமைக்கப்பட்டுள்ளது. விளையாட்டுகளுக்கான கட்டடங்கள் கட்டப்படுகிறதே தவிர குடிநீருக்கான வசதியை செய்ய மாவட்ட விளையாட்டு அலுவலகமும் முன்வரவில்லை.

ஓரிடத்தில் 500க்கும் மேற்பட்டோர் வசித்தால் அங்கு நகராட்சி அல்லது மாநகராட்சி சார்பில் குடிநீர்த்தொட்டி அமைத்துத்தர வேண்டும். இங்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து சென்றாலும் ஒரு குடிநீர்த்தொட்டி கூட அமைக்கவில்லை. மாநகராட்சி மேயர் நினைத்தால் இங்கு மேல்நிலை குடிநீர்த்தொட்டி அமைக்கலாம். தொட்டி அமைக்க அதிகம் செலவாகாது. ரேஸ்கோர்ஸ் வளாகத்தில் குறைந்தது ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவுள்ள மேல்நிலைத் தொட்டி அமைக்க மாநகராட்சிக்கு மாவட்ட நிர்வாகம் பரிந்துரை செய்து வீரர், வீராங்கனைகளின் தண்ணீர் தாகத்தை நிரந்தரமாக தீர்க்க வேண்டும்.






      Dinamalar
      Follow us