sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ஊராட்சிகளில் தாமதமாகும் 'பாரத் நெட்' : பணிகள் சுணக்கம்

/

ஊராட்சிகளில் தாமதமாகும் 'பாரத் நெட்' : பணிகள் சுணக்கம்

ஊராட்சிகளில் தாமதமாகும் 'பாரத் நெட்' : பணிகள் சுணக்கம்

ஊராட்சிகளில் தாமதமாகும் 'பாரத் நெட்' : பணிகள் சுணக்கம்


ADDED : ஜூன் 13, 2024 06:31 AM

Google News

ADDED : ஜூன் 13, 2024 06:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பேரையூர்: டி.கல்லுப்பட்டி ஒன்றியத்தில் கிராம ஊராட்சிகளுக்கு பாரத் நெட் திட்டத்தில் கேபிள் வந்தும் இன்டர்நெட் இணைப்பு கொடுக்க தாமதம் ஆவதால் ஊராட்சி பணிகளில் சுணக்கம் ஏற்படுகிறது.

அனைத்து மாநிலங்களிலும் கிராம ஊராட்சிகளை இணைத்து அரசின் சேவைகளை இணையதளம் வாயிலாக மக்கள் பெற வசதியாக பாரத் நெட் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது.

தமிழகத்தில் 12 ஆயிரத்து 524 கிராம ஊராட்சிகள் கண்ணாடி இழை கம்பி வடம் (ஆப்டிகல் பைபர்) மூலம் இணைத்து இணையதளம் வழியாக அரசின் சேவைகள் அளிக்கப்பட உள்ளது.

இத்திட்டத்தில் அனைத்து ஊராட்சிகளுக்கும் ஒரு ஜிபி அளவிலான அலைக்கற்றை வழங்கப்படும். பொதுமக்களுக்கும் குறைந்த விலையில் மின்னணு சேவை அளிக்கப்படும்.

டி.கல்லுப்பட்டி ஒன்றியத்தில் அனைத்து ஊராட்சிகளுக்கும் இத்திட்டத்தில் கேபிள் கொண்டு செல்லப்பட்டு ஓராண்டு ஆகியும் இதுவரை இணைப்பு கொடுக்கவில்லை.

இதனால் இன்டர்நெட் வசதிகளை பெற ஊராட்சி நிர்வாகத்தினர் சிரமப்படுகின்றனர். இன்டர்நெட் இணைப்பு இல்லாமல் மகளிர் சுய உதவி குழுவுக்காக கட்டிய கட்டடங்கள் வீணாகின்றன. ஊராட்சி செயலாளர்களோ சொந்த அலைபேசியில் இன்டர்நெட் இணைப்பை பெற்று பணிகளை மேற்கொள்கின்றனர். டவர் வசதி இல்லாத ஊராட்சிகளில் பணிகளில் சுணக்கம் ஏற்படுகிறது. ஊராட்சிகளுக்கு உடனடியாக 'பாரத் நெட்' இணைப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us