ADDED : ஜூலை 24, 2026 10:43 PM
அ நிறம் | அளவு
மதுரை, ஜூலை 25- உசிலம்பட்டி அருகே கருமாத்துார் ரஞ்சித்குமார் 46.
இவரிடம் மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட் அருகே 10 கிலோ கஞ்சா மற்றும் அதை கடத்த பயன்படுத்திய வாகனத்தை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் 2015 ல் பறிமுதல் செய்தனர். மதுரை போதைப்பொருள் தடுப்பு வழக்கு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் விஜயபாண்டியன் ஆஜரானார். நீதிபதி சுதாகர்,‛ரஞ்சித்குமாருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது,’ என்றார்.
