ADDED : ஜூலை 16, 2011 01:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முள்ளிப்பள்ளம் : சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் அரசு உயர்நிலைப்பள்ளியில் புகையிலை தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
பள்ளி வளாகத்தில் நடந்த விழிப்புணர்வு முகாமினை ஆசிரியர் நாகராஜன் துவக்கினார். தலைமை ஆசிரியை ஜமுனா 'புகை நாட்டுக்கு பகை' என்ற தலைப்பில் புகையிலையால் சமுதாயத்திற்கு ஏற்படும் தீவினைகள் குறித்து விளக்கினார். மாணவர்களின் விழிப்புணர்வு ஊர்வலத்தை உடற்பயிற்சி ஆசிரியர் பாலசுப்பிரமணியம் நடத்தினார். வீடுதோறும் விழிப்புணர்வு நோட்டீஸ் கொடுத்து, மாணவர்கள் பிரசாரம் செய்தனர்.