/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பலியானவரின் உடலை கிணற்றில் வீசிய 2 பேர் கைது
/
பலியானவரின் உடலை கிணற்றில் வீசிய 2 பேர் கைது
ADDED : ஆக 30, 2024 06:20 AM

உசிலம்பட்டி : மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மின்வேலியில் சிக்கி இறந்தவரின் உடலை கிணற்றில் வீசியதாக இருவர் கைது செய்யப்பட்டனர். இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
தொட்டப்பநாயக்கனுார் அருகே கிணற்றுக்குள் உடல் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. மின்சாரம் தாக்கி இறந்ததற்கான அடையாளம் இருந்தது. விசாரணையில் அவர் தேனி மாவட்டம் பூதிப்புரம் வலையபட்டி ஆடு மேய்க்கும் தொழிலாளி முருகன் 38, எனத்தெரிந்தது.
உசிலம்பட்டி நக்கலப்பட்டியில் உறவினர் சிங்கராஜாவிடம் இருந்து ஆடுகளை பெற்றுக்கொண்டு நேற்று முன்தினம் இரவு தொட்டப்பநாயக்கனுார் சென்றார். ஒரு ஆடு மட்டும் வழி தவறியது. அதனை தேடிச்சென்றவர் குஞ்சாம்பட்டி கருப்பசாமியின் பப்பாளி தோட்ட மின்வேலியில் சிக்கி இறந்தார். அவரது உடலை இரவோடு இரவாக கருப்பசாமி, அதே ஊரைச் சேர்ந்த ஹரிபிரகாஷ் 25, ராமச்சந்திரன் 27, கலையரசன் 50, ஆகியோர் பக்கத்தில் இருந்த கிணற்றில் வீசினர். ஹரிபிரகாஷ், கலையரசனை போலீசார் கைது செய்தனர். மற்ற இருவரை தேடி வருகின்றனர்.

