sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

5 லட்சம் மரக்கன்றுகள் நட ஈஷா திட்டம்

/

5 லட்சம் மரக்கன்றுகள் நட ஈஷா திட்டம்

5 லட்சம் மரக்கன்றுகள் நட ஈஷா திட்டம்

5 லட்சம் மரக்கன்றுகள் நட ஈஷா திட்டம்


ADDED : ஜூன் 02, 2024 03:58 AM

Google News

ADDED : ஜூன் 02, 2024 03:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மதுரை மாவட்ட விவசாய நிலங்களில், ஈஷாவின் 'காவிரி கூக்குரல் இயக்கம்' சார்பில் இந்தாண்டு 5 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது. நேற்று நடந்த தொடக்க விழாவில் அமைச்சர் மூர்த்தி விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கினார்.

கடந்தாண்டு மதுரை மாவட்டத்தில் 4 லட்சத்து 78 ஆயிரத்து 543 மரக்கன்றுகளும், தமிழகம் முழுவதும் 1.10 கோடி மரக்கன்றுகளும் நடப்பட்டன. இந்தாண்டு மதுரையில் 5 லட்சம் மரக்கன்றுகளும் தமிழகம் முழுவதும் 1.21 கோடி மரக்கன்றுகளும் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் மரக்கன்று நடவும், பராமரிக்கவும் தேவையான தொழில்நுட்ப உதவிகளை இலவசமாக ஈஷா வழங்கி வருகிறது. மண்ணுக்கேற்ற மரங்களை தேர்வு செய்தல், நீர், களை மேலாண்மை, ஊடுபயிர் சாகுபடி போன்ற ஆலோசனைகளை வழங்கி வருகிறது. மரக்கன்று தேவைக்கு 80009 80009ல் தொடர்பு கொள்ளலாம்.

எம்.எல்.ஏ., வெங்கடேசன், மகாத்மா மாண்டிசோரி பள்ளி நிர்வாகிகள் கார்த்திக், ஹம்சபிரியா, மாணவர்கள், விவசாயிகள், ஈஷா தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us