ADDED : செப் 03, 2024 05:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: 'மதுரை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டுகளில் சேதமடைந்த சாலைகள் ரூ. 50 லட்சத்தில் பராமரிக்கப்பட உள்ளது' என மண்டல தலைவர் சுவிதா தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: மண்டலத்திற்குட்பட்ட 21 வார்டுகளிலும் பெரும்பாலான ரோடுகள் சேதமடைந்தது குறித்து மண்டல கூட்டங்களில் கவுன்சிலர்களும், குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களும் வலியுறுத்தினர்.
ரோடுகளை பராமரிக்க ரூ. 50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் துவங்கும் என்றார்