ADDED : ஆக 30, 2024 06:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அழகர்கோவில் : அழகர்கோவில் கள்ளழகர் கோயிலின் உப கோயிலான தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் இணை கமிஷனர் செல்லத்துரை முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டது.
ரூ. 9 லட்சத்து 75 ஆயிரத்து 17, 13 கிராம் தங்கம், 48 கிராம் வெள்ளி காணிக்கையாக கிடைக்கப்பெற்றன. உதவி கமிஷனர் வளர்மதி, ஆய்வாளர் கர்ணன், கோயில் கண்காணிப்பாளர்கள் பாலமுருகன், பிரதீபா, அருட்செல்வன், அறங்காவலர் குழு பிரதிநிதி நல்லதம்பி, அறங்காவலர்கள் பாண்டியராஜன், செந்தில்குமார், மீனாட்சி பிரியா, பி.ஆர்.ஓ., முருகன் பங்கேற்றனர்.

