sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ஒரு போன் போதுமே

/

ஒரு போன் போதுமே

ஒரு போன் போதுமே

ஒரு போன் போதுமே


ADDED : ஜூன் 14, 2024 05:22 AM

Google News

ADDED : ஜூன் 14, 2024 05:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* சிதலமான தெரு

மதுரை சிம்மக்கல்லில் காமாட்சிபுரம் அக்ரஹாரம், அனுமன் கோயில் போகும் வழியில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் நடக்க கடினமாக உள்ளது. மாநாகராட்சி அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ஆனந்தலட்சுமி, சிம்மக்கல்

* கழிவுநீர் வெளியேற்றம்

கோரிப்பாளையம் பள்ளிவாசல் மெயின் ரோடு பகுதியில் பாதாள சாக்கடை மூடி உடைந்ததால் கழிவுநீர் வெளியேறுகிறது. அப்பகுதியில் துர்நாற்றம் வீசி நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. துப்புரவு தொழிலாளர்கள் விரைவில் சுத்தம் செய்ய வேண்டும்.

- சோலைராஜ், சுப்புரமணியபுரம்

* மோசமான ரோடு

திருநகர் விளாச்சேரி மெயின் ரோடு குண்டும் குழியுமாக இருப்பதால் நடந்து செல்வது கூட சிரமமாக உள்ளது. குப்பையை ரோட்டில் கொட்டியும், மழைநீர் தேங்கியும் இருப்பதால் பொதுமக்கள் அவதியடைகின்றனர். ரோடை சீரமைக்க அதிகாரிகள் முன் வர வேண்டும்.

- பிரபு, திருநகர்

* மின்விளக்கு வேண்டும்

மதுரை செங்குன்றம் பெரக்கா நகரிலுள்ள கே.ஆர்.பி நகர் பகுதியில் மின்விளக்கு பழுதால் இரவில் மக்கள் நடமாட முடியாமல் தவிக்கின்றனர். மின்வாரியம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- திவ்யா, செங்குன்றம்

* வேகத்தடை வேண்டும்

ஆரப்பாளையம் கிராஸ் ரோடு சந்திப்பில் வாகனங்கள் வேகமாக செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. விபத்துகளை தவிர்க்க மாநகராட்சி அதிகாரிகள் வேகத்தடை அமைக்க வேண்டும்.

- பாரதீயன், பொன்னநகரம் மெயின் ரோடு

* கழிவுநீர் வெளியேற்றம்

மதுரை பைபாஸ் ரோடு துரைசாமி நகர் ப்ரீத்தம் தெருவில் பாதாள சாக்கடை வெளியேறி கழிவுநீர் ரோட்டில் தேங்கி நிற்கிறது. இதன் அருகே மாநகராட்சி பூங்கா உள்ளதால் மக்கள் இவ்வழியாக செல்ல சிரமப்படுகின்றனர். கழிவுநீரை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ஹரிஷ், துரைசாமி நகர்

* மோசமான ரோடு

கான்பாளையம் 3வது தெரு முனிச்சாலை ரோட்டில் ரோடு பிளந்து மோசமாக உள்ளது. குழிகள் இருப்பதால் அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். விரைவில் சீரமைக்க வேண்டும்.

- பிரசன்னா, முனிச்சாலை ரோடு

* கழிவுநீர் வெளியேற்றம்

செல்லுார் திருவாப்புடையார் கோயில் தெருவில் சாக்கடை கழிவு வெளியேறுகிறது. பள்ளி செல்லும் வழி என்பதால் குழந்தைகள் சிரமப்படுகின்றனர். துர்நாற்றம் வீசி மக்கள் அவதியடைகின்றனர். மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- லக்ஷிதா, செல்லுார்






      Dinamalar
      Follow us