sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ஒரு போன் போதுமே

/

ஒரு போன் போதுமே

ஒரு போன் போதுமே

ஒரு போன் போதுமே


ADDED : ஜூலை 10, 2024 04:26 AM

Google News

ADDED : ஜூலை 10, 2024 04:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆக்கிரமிப்புகளை அகற்றுங்க

மதுரை தெற்குவாசல் சின்ன கடை வீதியில் கடைகள் வாகனங்கள் ரோட்டில் நிற்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாகனங்கள் சென்று வர சிரமமாக உள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- அசோக், தெற்குவாசல்

மின் விளக்கு எரியவில்லை

மதுரை ஆழ்வார்புரம் புது நத்தம் பகுதி பூங்கா அருகே அமைக்கப்பட்ட ஹைமாஸ் விளக்கு எரியாமல் இருப்பதால் இரவில் மக்கள் சிரமப்படுகின்றனர். அதிகாரிகள் விளக்கை சரி செய்ய வேண்டும்.

- ராஜா, ஆழ்வார்புரம்.

கட்டடத்தில் அரசமரம்

மன்னாடிமங்கலம் சச்சிதானந்தம் பிள்ளை நினைவு அரசு மருத்துவமனை கட்டடத்தின் மேல் அரச மரம் முளைத்து கட்டடத்தை சேதமாக்கும் நிலையுள்ளது. இதனை அகற்ற தக்க நடவடிக்கை வேண்டும்.

- மோகன், மன்னாடிமங்கலம்.

மின் விளக்கு வேண்டும்

மதுரை பசுமலை பகுதி பெரக்கா நகரிலுள்ள கே.ஆர்.பி நகர் பகுதியில் மின் விளக்கு பழுதடைந்துள்ளதால் அப்பகுதியில் மக்கள் நடந்து செல்ல முடியாமல் தவிக்கின்றனர். மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- அன்பரசி, பசுமலை.

வாய்க்காலின் சுவரை

உயர்த்த வேண்டும்

மதுரை காலாங்கரை கிழக்கு மேற்கு பகுதிகளில் உள்ள வாய்க்கால் ரோட்டின் நடுவே எந்த ஒரு தடுப்பும் இல்லாமல் இருப்பதால் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் நிலையுள்ளது. இரு பக்கமும் தடுப்புச் சுவரை உயர்த்த வேண்டும்.

- முருகேசபாண்டியன், ஜே.என்.கே. நகர்

தண்ணீர் தேக்கம்

ஆரப்பாளையம் ராஜா மில் ரோடு பகுதியில் தண்ணீர் ரோட்டில் தேங்கி நிற்பதால் மக்கள் அப்பகுதியில் நடந்து செல்ல சிரமப்படுகின்றனர். மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் சரிசெய்ய வேண்டும்.

- மணி, ஆரப்பாளையம்.

ரோட்டை சீரமைக்க வேண்டும்

கீழக்குயில்குடி தட்டனுார் நான்கு வழிச்சாலை முதல் சீனிவாச காலனி பிரதான சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். இதனால் பஸ் இயக்கப்படாமல் இருப்பதால் மக்கள் தவிக்கின்றனர்.

- சரவணன், தட்டனுார்.






      Dinamalar
      Follow us