sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ஒரு போன் போதுமே...

/

ஒரு போன் போதுமே...

ஒரு போன் போதுமே...

ஒரு போன் போதுமே...


ADDED : ஆக 06, 2024 05:17 AM

Google News

ADDED : ஆக 06, 2024 05:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தெருவெல்லாம் சாக்கடை

பழைய குயவர்பாளையம் ரோடு ஜானகி தெருவில் சில மாதங்களாக பாதாள சாக்கடை நிரம்பி ரோட்டில் தேங்கியுள்ளது. வயதானவர்கள், குழந்தைகளுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- மணிமாறன், தெற்குவாசல்.

தெருநாய் தொல்லை

மதுரை விஸ்வநாதபுரத்தில் தெருநாய்கள் அதிகளவில் உலா வருகின்றன. குழந்தைகள் விளையாடும் போதும், டூவீலரில் செல்லும் போதும் துரத்திச் சென்று கடிக்கின்றன. மாநகராட்சி அதிகாரிகள் நாய்களை கட்டுப்படுத்த வேண்டும்.

- ஷைலஜா, விஸ்வநாதபுரம்.

பள்ளிக் குழந்தைகள் அவதி

மதுரை 37 வது வார்டு அன்புநகர் வ.உ.சி., 2வது குறுக்குத் தெருவில் சாக்கடை அடைப்பு ஏற்பட்டு ரோட்டில் தேங்கியுள்ளது. கொசு உற்பத்தியாகி மக்கள் நோய் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- குமார், அன்புநகர்.

பெயரை மாத்துங்க

கச்சிராயன்பட்டி அருகே கோட்டப்பட்டியில் பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா திட்டத்தில் அமைத்த ரோட்டில் ஒரு பக்கம் மட்டும் எல்லைக்கோடு வரைந்துள்ளனர். மைல் கல்லில் கொட்டப்பட்டி என பெயரையும் தவறாக எழுதியுள்ளனர். அதிகாரிகள் சரிசெய்ய வேண்டும்.

- மலைச்செல்வம், கோட்டப்பட்டி.

சித்திரை வீதியில் பீதி

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வடக்கு சித்திரை வீதியில் மின்சார கேபிள்களும், சிதிலமடைந்த பாதாள சாக்கடை சிலாப்களும் பக்தர்களை காவு வாங்க காத்துக்கொண்டிருக்கின்றன. அசம்பாவிதம் ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- அழகர், வடக்குவாசல்.

மூச்சு முட்டுதுங்கய்யா

ஒத்தக்கடை - திருமோகூர் ரோட்டில் சேகரிக்கப்படும் குப்பையை ரோட்டோரம் குவித்து எரிக்கின்றனர். இதனால் அப்பகுதியினர் புகைமூட்டத்தால் சிரமப்படுகின்றனர். மாநகராட்சி அதிகாரிகள் குப்பையை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- கங்கை துரைசாமி, ஒத்தக்கடை.

பஸ் ஸ்டாப் கூரை எங்கே

சோழவந்தானில் எந்தவொரு பஸ் ஸ்டாப்பிலும் நிழற்கூரை இல்லை. இதனால் பஸ்சுக்கு காத்திருக்கும் பயணிகள் வெயில், மழையில் பரிதவிக்கின்றனர். அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ரங்கநாதன், சோழவந்தான்.






      Dinamalar
      Follow us